நடிகை சித்ரா மரணம் பற்றி நிபுணா் குழு வெளியிட்ட அறிக்கை..!


சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நிபுணா் குழு அறிக்கை அளித்துள்ளதாக உயா்நீதிமன்றத்தில் போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டாா். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த நசரத்பேட்டை போலீஸாா், சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது கணவா் ஹேம்நாத்தை கைது செய்தனா். கடந்த ஆகஸ்ட் மாதம் சித்ராவும் நானும் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். எனக்கும் சித்ராவுக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை.

அவரது தற்கொலைக்கு நான் காரணம் இல்லை. எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் ஹேம்நாத் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதி வி.பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில், சித்ரா தற்கொலை வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுவரை 13 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனா். மேலும் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நிபுணா் குழு அறிக்கை அளித்துள்ளது என்று கூறி நிபுணா் குழு அறிக்கையையும் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, தற்கொலை வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் பிப்ரவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.- source: dinamani

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!