லேடீஸ் கழிவறையில் ரகசிய கேமரா… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்.!!


கழிவறையில் கேமரா பொருத்தி பெண்களை ஆபாச படம் பிடித்த குற்றத்திற்காக சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வந்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் சஞ்சு என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தை செட்டிகுளம் சற்குண வீதியில் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தில் ஏராளமான பெண்கள் வேலை பார்க்கின்றனர். இந்நிலையில் அந்த நிறுவனத்தின் கழிவறைக்கு சென்ற பெண் சுவரில் ஏதோ வித்தியாசமான ஒரு கருவி பொருத்தப்பட்டு இருந்ததை பார்த்துள்ளார்.

அதன்பின் அந்த கருவியை அந்த பெண் உற்றுப் பார்த்தபோது, அது ரகசிய கேமரா என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அந்த பெண் சக பெண் ஊழியர்க ளிடம் தகவல் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் அனைவரும் சஞ்சுவிடம் அந்த ரகசிய கேமரா குறித்து கேட்டுள்ளனர். ஆனால் சஞ்சு அவர்களிடம் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் கோட்டார் காவல் நிலையத்திற்கு அந்த பெண் ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கழிவறையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி விட்டனர்.

இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சஞ்சு சாப்ட்வேர் நிறுவனத்தை நடத்திக் கொண்டு, கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தி இளம்பெண்களின் ஆபாச படங்களை அந்த கேமரா மூலம் தனது செல்போனுடன் இணைத்து பார்த்து வந்துள்ளார் என்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரின் லேப்டாப் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார், கழிவறையில் கேமரா பொருத்தி பெண்களை ஆபாச படம் பிடித்த குற்றத்திற்காக அவரை கைது செய்து விட்டனர். அதன்பின் சஞ்சு படம்பிடித்த ஆபாச காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து உள்ளாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.- source: seithisolai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!