பெண் ஊழியருடன் உல்லாசமாக இருந்த பிரபல பாதிரியார் !!


திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள காப்பகம் ஒன்றில் பாதிரியார் ஒருவர் அங்குள்ள ஒரு பெண் ஊழியருடன் உல்லாசமாக இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பணகுடி அருகே உள்ள ரோஸ்மியபுரம் என்ற ஊரில் ஹெர் மைன்ஸ் என்ற பெயரில் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் முதியோர்கள் உள்ளிட்ட 30 -க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த காப்பகத்தை ஜோசப் ஈஸிதோர் என்ற பாதிரியார் நிர்வாகம் செய்து வருகிறார்.

இந்நிலையில், பாதிரியார் ஜோசப்புக்கும் அங்கு வேலை பார்த்து வந்த ஜெயலட்சுமி என்பவருக்கும் கள்ள உறவு இருந்துள்ளது. கடந்த 25-ம் தேதி காப்பகத்தில் உள்ள ஒரு அறையில் பாதிரியார் ஜோசப்பும், ஜெயலெட்சுமியும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை அங்கு வேலை செய்யும் ராஜம்மாள் நேரில் பார்த்து அதிர்சசி அடைந்தார்.

இதனை அவர் வெளியே சொல்லிவிடுவார் என்ற பயத்தில் பாதிரியார் ஜோசப் மற்றும் ஜெயலட்சுமி ஆகியோர் சேர்ந்து ராஜம்மாள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், அவர் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து ராதாபுரம் அரசு மருத்துவமனையில் ராஜம்மாள் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது பற்றி தகவல் அறிந்த போலீசார் ராஜம்மாளிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கொடுக்க வாக்குமூலத்தின் அடிப்படிடையில், பாதிரியார் ஜோசப் மற்றும் ஜெயலட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.- source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!