சிறுவர் பூங்காவில் விளையாட சென்ற பள்ளி மாணவனுக்கு நடந்த கொடூரம்!


தாம்பரத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் விளையாட சென்ற போது கதவு பூட்டியிருந்ததால், சுவர் ஏறி குதிக்க முயன்ற நிலையில், இரும்பு கம்பியில் சட்டை சிக்கியதால் கழுத்து இறுக்கி சிறுவன் இறந்தான்..

மேற்கு தாம்பரம் குளக்கரை 2-வது தெருவைச் சேர்ந்தவர் கவிதா. இவரது மகன் மவுனிக் (வயது 10). கக்கன் தெருவில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில், சிறுவன் மவுனிக் நேற்று மாலை அம்பாள் நகரில் உள்ள சிறுவர் பூங்காவிற்கு விளையாட சென்றான். ஆனால் பூங்கா கதவு பூட்டப்பட்டிருந்தது. இதனால் அதன் அருகில் இருந்த ரேஷன் கடையின் நுழைவு வாயிலில் உடைந்து இருந்த இரும்பு கதவின் வழியே நுழைந்து பூங்கா சுற்றுச்சுவர் மீது ஏறி உள்ளே குதிக்க முயன்றான்.

அப்போது எதிர்பாராதவிதமாக மவுனிக் அணிந்திருந்த சட்டையின், காலர் பகுதி சுற்றுச்சுவரில் இருந்த இரும்புக் கிரில் கம்பியில் சிக்கியது. அது அவனது, கழுத்தை இறுக்கியது. இதில் மூச்சு திணறி சிறுவன் உயிருக்கு போராடினான்.

பலி

இந்த நிலையில், சிறுவனை காணாமல் தேடி அலைந்த உறவினர்கள், பூங்காவின் கிரில் கம்பியில் தொங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதைத்தொடர்ந்து, சிறுவனை மீட்டு, பழைய பெருங்களத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், மவுனிக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து அறிந்த தாம்பரம் போலீசார் சம்பவ இடத்திற்கு அவனது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விளையாட சென்ற பள்ளி மாணவன் இரும்பு கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.- source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!