இனி நீ தான் நாட்டுக்கே ராணி..! பிளே பாய் மன்னர் அறிவிப்பு…!


தாய்லாந்து நாட்டின் மன்னர் தான் விரும்பிய பெண்ணின் பிறந்தநாள் பரிசாக நாட்டின் ராணியாக அறிவித்துள்ளார்.

தாய்லாந்து நாட்டின் மன்னர் வஜிரலோகார்ன் (68) அழகிகளுடன் தான் எப்போதும் உலா வருவார் என்றும் நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்தாலும் 100 இளம்பெண்களை மற்றொரு நாட்டின் ஓட்டலுக்கு அழைத்துச்சென்று உல்லாசம் அனுபவிக்கும் பிளேபாய் என்றும் பெயர் பெற்றவர். இந்நிலையில் தன் பாதுகாவலராக இருந்த Sineenat Wongvajirapakdi என்ற பெண் பைலட்டை கடந்த 2019 ஆம் வருடத்தில் ஜூலை மாதத்தில் அவரின் பிறந்த நாளன்று ராஜ வைப்பாட்டி என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இது உலகில் எங்குமே நடைபெறாத நிகழ்வாகும். எனினும் அவர் அறிவித்த 3 மாதங்களிலேயே ராணியின் இடத்தை பிடிக்க முயற்சி செய்வதாக Sineenat மீது குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதன்பின்பு அவர் விடுவிக்கப்பட்டபோது அவரின் 1400 நிர்வாண படங்கள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பானது.

இந்நிலையில் தற்போது Sineenat இன் 36வது பிறந்த நாளில் அவர் என்ன செய்யப்போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். இந்நிலையில் எவருமே எதிர்பாராத வகையில் Sineenatஇன் பிறந்தநாள் பரிசாக நாட்டின் இரண்டாவது ராணியாக அறிவித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார். இதனைத்தொடர்ந்து மன்னர் மற்றும் ராணியார் இருவரும் ஒரே நிறத்தில் உடைகள் அணிந்து பிறந்தநாளை புத்த முறைப்படி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.- source: seithisolai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!