சொந்த சகோதரர்களால் 55 வயது பெண்ணுக்கு நடந்த சோகம்..!


மதுரை பெருங்குடி அருகே சொத்து பிரச்சினையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது சகோதர, சகோதரிகளிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுரை பெருங்குடி சிவசக்தி நகரை சேர்ந்தவர் முகமது கவுஸ். இவரது மனைவி காத்தூன் பீவி (வயது 55). இவர் தனது பூர்வீக இடத்தில் வீடு கட்டி வசித்து வந்துள்ளார். இது தொடர்பாக அவரது சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை உறவினர்கள் சேர்ந்து அரிவாள்மனை மற்றும் கம்புகளை கொண்டு தாக்கியதில் காத்தூன்பீவி பலத்த காயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரவில் அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து காத்தூன்பீவியின் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளிடம் விசாரித்து வருகின்றனர்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!