பெண்கள் குளிக்கும் போது.. இவர் செய்த வேலை இருக்கே – அடித்து உதைத்த பொதுமக்கள்!


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இளம் பெண்கள் குளிக்கும்போது வீடியோ எடுத்த தனியார் கம்பனி சூப்பர்வைசரை பொதுமக்கள் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சரளா நகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் ராஜன்(34) இவருக்கு திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகிறது.

ராஜன் வீட்டின் மேல் மாடியில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஐந்திற்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி வந்துள்ளனர். இந்த நிலையில் பெண்கல் குளிக்கும் குளியலறையில் செல்போனில் ஒருவர் படமெடுப்பதை பார்த்து அந்த பெண் கூச்சலிட்டுள்ளார்.

இதில் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து செல்போனில் படமெடுத்து கொண்டிருந்த ராஜனை பிடித்து தர்மஅடி கொடுத்து பின்னர் ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து ராஜன் மீது வழக்கு பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் ராஜனை சிறையில் அடைத்தனர்.

வெளியூரிலிருந்து தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் தங்கியிருக்கும் பெண்களை குளிக்கும்போது வீடியோ எடுத்த இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோன்று கவனக் குறைவாக உள்ள வீட்டு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!