நடுரோட்டில் பிணமாக கிடந்த இளைஞர்! மதுரையில் கொடூரம்


மதுரையில் ஆணுறுப்பு சிதைக்கப்பட்ட நிலையில் சாலையில் பிணமாக கிடந்த இளைஞரின் உடலை கைப்பற்றிய ஜெய்ஹிந்தபுரம் போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை சோலையழகுபுரம் பகுதியை சேர்ந்தவர் காதர் மஸ்தான் (30), ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் இவரை நேற்று காலை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், அவரது ஆணுறுப்பு சிதைக்கப்பட்ட நிலையில், ஜீவா நகர் 2ஆவது தெருவில் கிடந்துள்ளது.

இதனைக் கண்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதை தொடர்ந்து அங்கு வந்த மதுரை ஜெய்ஹிந்தபுரம் போலீசார், காதர் மஸ்தான் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் காதர் மஸ்தான் அடிக்கடி தொடர்ந்து வீட்டில் உறவினர்களோடு பிரச்னை செய்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே காதரின் உறவினர்களே இந்தக் கொலையை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!