பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது பாலாஜி புலம்பல் – வெளியான உருக்கமான பதிவு.!!


நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக பாலாஜி முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது.

பிக் பாஸ் சீசன் 4-ன் வெற்றியாளராக ஆரி தேர்வானார். ரன்னர் ஆக பாலாஜி முருகதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பாலாஜி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றிருந்த போது தனக்கு தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் துரோகம் செய்துவிட்டதாக புலம்பி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதுவரை தனக்கு ஆதரவாக இருந்து ஓட்டளித்து ரன்னராக தேர்வு செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். பாலாஜி மற்றும் ஷெரின் இடையே நடந்த வாக்குவாதத்தால் பலரும் ஷெரினை விமர்சனம் செய்து வந்த நிலையில் அவரை யாரும் விமர்சிக்க வேண்டாம் அவர் என்னுடைய நல்ல நண்பர் எனவும் தெரிவித்துள்ளார்.- source: kalakkal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!