நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அதிரடி திருப்பம்!


சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹேம்நாத்திற்கு ஜாமீன் வழங்க கூடாது என அவரது நண்பரே சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நடிகை சித்ரா கடந்த டிசம்பர் 9ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக அவருடன் இருந்த அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார்.

சித்ராவுக்கும், ஹேம்நாத்துக்கும் திருமணமாகி இரண்டே மாதத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேமந்த்தை கைது செய்த நசரத்பேட்டை போலீஸார் அவரிடம் 6 நாட்கள் விசாரணை நடந்தினர். தற்போது அவர் புழல் சிறையில் உள்ளார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் புதுப்பாக்கத்தை சேர்ந்த சையது ரோஹித் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் ஹேம்நாத் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு பணம் பறித்து வந்தார் என குறிப்பிடப்பட்டிருந்தது.

சித்ராவின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு, அவரை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஹேம்நாத் துன்புறுத்தினார் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஹேம்நாத்தின் ஜாமீன் வழக்கு விசாரணை ஜனவரி 21ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.- source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!