டைட்டில் ஜெயித்தப் பின் முதன்முறையாக ஆரி போட்ட வைரல் பதிவு..!


பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் நான்காவது சீசன், நேற்றுடன் கோலகலமாக முடிவடைந்தது. பலராலும் எதிர்பார்க்கப்பட்டது போல நடிகர் ஆரி அர்ஜுனா தான், நான்காவது சீசனின் டைட்டில் வின்னராக முடிசூடப்பட்டு இருக்கிறார். ஆரிக்கு அபரிமிதமான மக்கள் ஆதரவு இருந்த காரணத்தினாலேயே, அவரால் பிக் பாஸ் டைட்டிலை வெல்ல முடிந்தது.

நேற்று மாலை 6 மணி முதல் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாள் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. சுமார் 6 மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சியில், இந்த சீசனில் பங்கு கொண்ட அனைத்துப் போட்டியாளர்களும் சிறப்பு அழைப்பாளராக வரவழைக்கப்பட்டு இருந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருத் தனித் திறமை இருந்தது. அந்த தனித் திறமையை சுட்டிக் காட்டி விருதுகளும் வழங்கி கவுரவிக்கப்பட்டன. போட்டியாளர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்ட ஏதுவாக கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

கடைசியாக பிக் பாஸ் வீட்டுக்குள் 5 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர். சோம், ரம்யா பாண்டியன், ரியோ, பாலா மற்றும் ஆரி ஆகியோர் மட்டுமே வீட்டில் பாக்கி இருந்தனர். இவர்களில் ஒருவர் தான் டைட்டிலை வெல்ல வாய்ப்பிருந்தது. ஷோவின் ஹோஸ்ட் கமல், 5வது இடத்தைப் பிடித்த நபரில் இருந்து ஒருவர் பின் ஒருவராக வீட்டில் இருந்து அழைத்தார். கடைசியாக பாலாவும் ஆரியும் இருந்தனர். இருவரையும் ஒரே நேரத்தில் அழைத்து ஆரி தான், டைட்டிலை வென்றார் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக அவருக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் தன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆரி, பிக் பாஸ் வெற்றிக்கு யார் காரணம் என்பது குறித்து பதிவிட்டுள்ளார். பிக் பாஸ் கோப்பையுடன் போஸ் கொடுத்தபடி புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ஆரி, ‘எல்லாம் புகழும் வாக்களித்த உங்களுக்கே..’ என்று மக்களுக்கு தன் வெற்றியை உரித்தாக்கி மீண்டும் அனைவரையும் கவர்ந்துள்ளார்.- source: seithichurul

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!