காரணமே இல்லாமல் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை மேடவாக்கத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரின் மனைவி பிரீத்தி. இந்த தம்பதிக்கு கவுசல்யா என்ற மகள் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீதர் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.
தாயும் மகளும் மட்டும் வீட்டில் வசித்து வந்தனர். பயோகெமிக்கல் படித்த கவுசல்யா பெங்களூருவில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். கொரோனா காரணமாக, சென்னை திரும்பிய அவர் தற்போத வீட்டில் இருந்தபடி பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில், தன் வீட்டில் உள்ள அறையில் திடீரென்று துாக்கிட்டு கவுசல்யா தற்கொலை செய்துக் கொண்டார். ஏற்கெனவே, கணவர் இழந்த நிலையில் மகளை பறிகொடுத்த தாயார் ப்ரீத்தி கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கவுசல்யாவுக்கு குடும்பத்தில் எந்த பிரச்னையும் இல்லை என்று சொல்லப்படுகிறது. காதல் விவகாரம் எதிலும் அவர் சிக்கவில்லை என்றும் சொல்கிறார்கள்.
இதனால் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.- source: daily.tamilnadu
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!