ஒரே சமயத்தில் குழந்தை பெற்ற தாய் -மகள்..!


தாய் மற்றும் மகள் இருவரும் ஒரே சமயத்தில் கருத்தரித்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் வசிக்கும் Kelsi perce (31) என்ற பெண்ணிற்கு kyle என்பவருடன் கடந்த 2014 ஆம் ஆண்டில் திருமணம் நடந்துள்ளது. இதனைத்தொடர்ந்து குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சி செய்து வந்துள்ளனர். ஆனால் Kelsi கருத்தரிக்கவில்லை. இதனால் அவர் மிகுந்த வேதனை அடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து Kelsi மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அதில் அவருக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் Kelsi வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளார். அதன்படி Kelsiக்கு அவரின் தாய் Ruthar ford வாடகைத் தாயாக மாறியுள்ளார். இதனையடுத்து அவரின் தாய் கருத்தரித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து ஆச்சரியமூட்டும் வகையில் Kelsi யும் கர்ப்பமாகியுள்ளார். மேலும் தற்போது இருவருக்கும் பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. மேலும் இதுகுறித்து Kelsi கூறியுள்ளதாவது, எனக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கூறியது மிகவும் வருத்தமளித்தது. இதனால் எப்படியாவது தாயாக விரும்பினேன். எனவே என் தாய் எனக்கு வாடகை தாயானார். தற்போது நானே கர்ப்பமானது பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. மேலும் என் தாயின் வயதை கருத்தில் கொண்டு நான் மிகவும் பயந்தேன். ஆனால் மருத்துவர்களின் உதவியால் பாதுகாப்பாக அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று கூறியுள்ளார்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!