பிரபல நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா..? புலம்பும் ரசிகர்கள்..!


80-களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயஸ்ரீ. தென்றலே என்னை தொடு திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர் விடிஞ்சா கல்யாணம், நாளைய மனிதன், பிஸ்தா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

1988 திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு முழுநேர இல்லத்தரசியாக கணவர் குழந்தைகளுடன் அமெரிக்காவில் செட்டிலானார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஒரு நடிகை ஜெயஸ்ரீ ஹோட்டலில் சமைப்பது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவ ரசிகர்களும், திரைத்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர். குடும்ப வறுமை காரணமாக தான் இப்படி வேலை செய்கிறாரோ என்ற கருத்து நிலவியது.

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து நடிகை ஜெயஸ்ரீ கூறுகையில்” அமெரிக்க அரசு காப்பகத்தில் தன்னார்வலராக பணியாற்றி தங்களின் சமூக கடமைகளை நிலை நிறுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஜெயஸ்ரீயும் அங்கு தன்னார்வலராக சேவை செய்து வருவதாகவும், மேலும்,அமெரிக்காவை பொறுத்தவரை ஆதரவற்றவர்களுக்கு என காப்பகங்கள் இருக்கின்றன.

அங்கே தன்னார்வலராக நாமும் சென்று, உணவு சமைத்து பரிமாறலாம். ஸ்டார் ஹோட்டல்களுக்கு இணையான உணவுகளை சமைத்துக் கொடுத்து அவர்களை மகிழ்விக்க அங்கே அனுமதி தரப்படுகிறது.

வார விடுமுறை நாட்களில் அரசு காப்பகங்களுக்கு செல்வேன் .அங்கு அவர்கள் கொடுக்கும் பொருள்களை கொண்டு உணவுகளை உயர் ரகமாக சமைத்து கொடுத்து விட்டு அன்போடு பரிமாறுவது வழக்கம். நமது சமூகத்தில் நம்முடன் வாழும் மற்றவர்களும் சமம்தான். யாருக்குள்ளும் எந்த ஏற்ற தாழ்வோ பாகுபாடோ இல்லை. எனக்கு அவ்வபோது உதவிக்கு என் மகனும் என்னுடன் பணியாற்றுகிறார்” என நெகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.- source: 1news

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!