கல்யாணமாகி 10 நாட்களில் கணவரை பிரிந்தது ஏன்..?


விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளனிகளில் ஒருவர் ரம்யா. இவர் தற்போது நடிக்கவும் துவங்கியுள்ளார்.

தொகுப்பாளினி ரம்யா கடந்த 2014ஆம் ஆண்டு ஜெயராம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அடுத்த ஆண்டே அவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வந்துவிட்டார். இதற்கு காரணம், ரம்யா படங்களில் நடிக்க துவங்கியது தான் என்று கிசுகிசுப்பட்ட நிலையில், அதற்கு உண்மையான காரணம் இது தானாம்.

” திருமணமான பத்து நாட்களில் இருவருக்கும் செட் ஆகாது என முடிவு செய்துவிட்டார்களாம். மேலும் இருவரின் கருத்துக்களும் வெவ்வேறு விதமாக இருந்தது தான், இருவரின் பிரிவுக்கு முக்கிய காரணமாம். ”

” இதனால் எந்த ஒரு சண்டை சச்சரவும் இல்லாமல் அமைதியாக திரும்ப அம்மா வீட்டுக்கே வந்து விட்டதாகவும். மேலும் ஒரு வருடம் கழித்து இருவரும் விவாகரத்து பெற்று கொண்டாராம் ” என தெரிவிக்கின்றனர்.- source: tamil.minutes

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!