சீரழிக்க வந்தவனை கொலை செய்த பெண் விடுதலை! குவியும் பாராட்டு


திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அல்லிமேடு கிராமத்தைச் சேர்ந்த கௌதமி(19) என்ற பெண் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்ற போது, அவரது உறவினரான அஜித்குமார்(25) என்ற இளைஞர் கௌதமியை பின் தொடர்ந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அப்பெண்ணிடம் கத்தியை அந்த இளைஞர் தவறாக நடக்க முயற்சி செய்ததாக தெரிகிறது. அந்த இளைஞரிடம் இருந்து கத்தியை பிடுங்கிய அந்த பெண் அஜித்குமாரை சரமாரியாக வெட்டினார்.இதில் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து கெளதமி சோழவரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். பாலியல் கொடுமை செய்ய வந்த நபரிடம் இருந்து தற்காத்து கொள்ளவே அவரை கொலை செய்ததாக கௌதமி வாக்குமூலம் அளித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் போலீஸார் பெண்ணுக்கு சாதகமாக நடந்து கொண்டுள்ளனர். அதாவது கொலை வழக்காக பதிவு செய்யாமல் தற்காப்புக்காக நடந்த கொலை என இந்திய தண்டனை சட்டம் 100வது பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.- source: ciniexpress

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!