என்னால உன்ன காப்பாத்த முடியல.. கதறும் அனிதா சம்பத்..!


தொலைக்காட்சி செய்தியாளராக நெட்டிசன்களிடம் பிரபலமானவர் அனிதா சம்பத். பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சமீபத்தில் வெளியேறினார்.

இவரின் தந்தை சம்பத் திடீரென ஏற்பட்ட மாரடைப்பில் மரணம் அடைந்துள்ளார். சம்பத் ஒரு எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் மரணத்திற்கு சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

அப்பாவ கடைசியா இப்படிதான் பாத்தேன்..பிக்பாஸ் quarantine போகும்போது எடுத்தது..

https://www.instagram.com/p/CJbDz0EhVoS/
அப்பானா எனக்கு உயிரு..எங்க எங்கயோ டூர் கூட்டிட்டு போனும்னு ஆசையா ஓடி வந்தேன்..எனக்கு முன்னாடியே நீயே கிளம்பி போய் இருக்க கூடாது டாடி..
ஒரு நாள் பொருத்து இருந்தா நான் கூட வந்துருப்பேன்..உன்ன வழியிலயே hospital கூட்டிட்டு போய் இருப்பேன்..நீ இன்னும் பத்து வர்ஷமாவது என் கூட இருந்து இருப்ப..

Sorry daddy..என்னால உன்ன காப்பாத்த முடியல..வாழ்நாள் முழுவதும் இந்த குற்றஉணர்ச்சி என்ன விட்டு போகாது..

எங்க போன ராசா…

என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.- source: tn.flash

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!