பாதிரியாருடன் ஓட்டம் பிடித்த இளம்பெண் – போலீசில் பெற்றோர் பரபரப்பு புகார்


பல்லாரியில் பாதிரியாருடன், இளம்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் நடந்து உள்ளது. பாதிரியார் மீது இளம்பெண்ணின் பெற்றோர் போலீசில் பரபரப்பு புகார் அளித்து உள்ளனர்.

பல்லாரி டவுன் பதரி பகுதியில் கிறிஸ்தவ தேவாலயம் அமைந்து உள்ளது. இந்த தேவாலயத்தின் பாதிரியாராக ரவிக்குமார் (வயது 54) என்பவர் இருந்தார். இந்த நிலையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த தேவாலயத்திற்கு 24 வயது இளம்பெண் ஒருவர் சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தார். இதனால் அந்த பாதிரியாருக்கும், இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயத்திற்கு சென்ற இளம்பெண், பிரார்த்தனை முடிந்ததும் பாதிரியாருடன் காதலை வளர்த்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற இளம்பெண், அதன்பின்னர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இளம்பெண்ணை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் தங்கள் மகள் மாயமாகி விட்டதாக பல்லாரி டவுன் போலீசில் இளம்பெண்ணின் பெற்றோர் புகார் அளித்து இருந்தனர்.

இதற்கிடையே பாதிரியார் ரவிக்குமாரும் திடீரென மாயமானார். இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் விசாரித்த போது தான், தங்கள் மகளும், பாதிரியாரும் காதலித்து வந்ததும், பாதிரியாருடன் தங்கள் மகள் ஓட்டம் பிடித்ததும், இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது.

இதையடுத்து பல்லாரி டவுன் போலீஸ் நிலையத்தில் இளம்பெண்ணின் பெற்றோர் மீண்டும் ஒரு புகார் அளித்தனர். அதில் எங்களது மகளை பாதிரியார் ரவிக்குமார் கடத்தி சென்று விட்டார். தேவாலயத்திற்கு வந்த பல இளம்பெண்களுக்கு, பாதிரியார் ரவிக்குமார் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். அவரிடம் இருந்து எங்கள் மகளை மீட்டு தர வேண்டும் என்று அந்த புகாரில் கூறப்பட்டு இருந்தது. அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாதிரியாரையும், இளம்பெண்ணையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.- source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!