போனி கபூர் குடும்பத்தையே சுக்குநூறாக உடைத்த ஸ்ரீதேவி..!


பாலிவுட்டில் மட்டுமல்லாமல் இந்திய சினிமா துறையில் மிக முக்கிய நடிகையாக கருதப்பட்டவர் தான் ஸ்ரீதேவி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பணியாற்றியிருக்கிறார்.

மேலும் ஸ்ரீதேவி பாலிவுட்டின் தயாரிப்பாளரான போனி கபூரை காதல் திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் இருவருக்கும் இடையே எவ்வாறு ஒரு சிக்கலான காதல் கதை உருவானது என்பது பலரை ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது.

அதாவது ஸ்ரீதேவியை போனி கபூர் காதலித்த போது, அவருக்கு மோனாவுடன் திருமணமாகி, அர்ஜுன் கபூர், அனுஷா கபூர் ஆகிய இரு குழந்தைகள் இருந்தனராம். ஆனால் அப்போது ஸ்ரீதேவி போனி கபூரை காதலிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

மேலும் போனிகபூர் ஸ்ரீதேவியை கவர்வதற்காக பல விஷயங்களை செய்தாராம். குறிப்பாக, ஸ்ரீதேவி மிஸ்டர் இந்தியா மூவிக்காக 10 லட்சம் சம்பளமாககேட்ட போது, போனி கபூர் ஸ்ரீதேவிக்கு 11 லட்சம் கொடுத்து அவரை மிரள வைத்தாராம். அதோடு, ஸ்ரீதேவி போனி கபூரின் மனைவியான மோனாவிற்கு மிக நெருங்கிய நண்பராக இருந்ததோடு, போனி கபூரின் வீட்டிற்கு அடிக்கடி செல்வதும் உண்டு என்றும் கூறுகின்றனர்.


ஆனால், 1993ஆம் ஆண்டு போனிகபூர், ஒரு ஃபிலிம்ஃபேர் விருது நிகழ்ச்சியில் ப்ரபோஸ் செய்தபோது, ஸ்ரீதேவி போனி கபூரை நிராகரித்ததோடு, எட்டு மாதங்களுக்கு மேலாக அவருடன் பேசுவதையே நிறுத்தி விட்டாராம்.

அதற்குப் பிறகு, 1993ஆம் ஆண்டு மும்பையில் வெடிகுண்டு விபத்து நடந்த போது ஸ்ரீதேவி, அவரது தாயாரின் வற்புறுத்தலால் போனி கபூரின் வீட்டில் ஒரு மாதம் தங்கி இருந்தாராம். அதற்குப்பிறகு 1996 ஆம் ஆண்டு ஸ்ரீதேவி போனி கபூரின் குழந்தையான ஜான்வி கபூர்காக கருவுற்றிருந்த போது தான் இந்த விஷயமே முதல் மனைவி மோனாவிற்கு தெரிந்ததாம்.

இதன் பிறகு, போனி கபூர் மோனாவை விட்டு பிரிந்து, ஸ்ரீதேவியுடன் வாழத் தொடங்கி விட்டாராம். இதனால் ஸ்ரீதேவி ‘வீட்டை உடைத்தவர்’ என்ற சொல்லுக்கு ஆளானார் என்றும் கூறப்படுகிறது.

எனவே, ஸ்ரீதேவியின் கடந்த கால வாழ்க்கை பற்றிய இந்த தகவல்கள் திரையுலகத்திற்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.- source: pettai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!