முதலிரவு காட்சியால் முடிந்து போன சித்ராவின் வாழ்க்கை..!


தமிழ் சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் சித்ரா. தொகுப்பாளினியாக பயணத்தை தொடங்கிய இவர் சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து இருந்தார்.

ஆனாலும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை என்ற கதாபாத்திரம் தான் சித்ராவிற்கு மிகப்பெரிய வரவேற்பையும் இடத்தையும் பெற்றுக் கொடுத்தது.

சில மாதங்களுக்கு முன்னர் சித்ராவுக்கும் ஹேமந்த் ரவி என்பவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து ரகசிய பதிவு திருமணம் நடைபெற்றுள்ளது.இப்படியான நிலையில்தான் சமீபத்தில் இவர் ஹோட்டல் ஒன்றில் மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்போது இவருடைய தாயார் அளித்த பேட்டி ஒன்றில் சித்ராவுக்கு திருமணத்திற்கு முன்பாகவே கடன் தொல்லை இருந்தது என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முதல் இரவு காட்சியில் நடித்த பிறகுதான் அவருடைய கணவரின் நடவடிக்கை மாறியது. முதலிரவு காட்சியில் நடித்து வாழ்க்கையை கெடுத்துக்கிட்டா என்று பேசியுள்ளார்.

சித்ராவின் கணவர் சீரியலில் நடிக்க கூடாது எனவும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று சண்டையிட்டு வந்ததாலும் மன உளைச்சலுக்கு ஆளான சித்ரா தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.- source: kalakkal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!