திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் சோக முடிவு !


சென்னை மதுரவாயலை கார்த்தி(24) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ரேணுகா(20) தம்பதிக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. எலக்ட்ரீசியனாக உள்ள கார்த்தி மதுபழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி குடித்துவிட்டு மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனை ரேணுகா பலமுறை கண்டித்தும் கார்த்தி குடிப்பழக்கத்தை நிறுத்தவில்லை. இதனால் அப்பெண் மன உளைச்சலில் இருந்துவந்துள்ளார். அந்த வகையில் நேற்றுமுன்தினமும் குடித்துவிட்டு வந்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இனிமேல் குடிக்கமாட்டேன் என கார்த்தி உறுதி அளித்துள்ளார்.

ஆனால் இதுபோன்று பல முறை கூறியும் அவர் அடிக்கடி மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் கணவர் நேற்று காலை மீன்கடைக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த ரேணுகா தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

பின்னர் வீட்டிற்கு வந்த கார்த்தி மனைவி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை கைப்பற்றிய மதுரவாயல் போலீசார், இளம்பெண் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்போது இளம்பெண்ணின் தந்தையும் குடிபழக்கம் உடையவர் என கூறப்படுகிறது. இதனால் கணவன் குடிக்கக்கூடாது என எண்ணியே திருமணம் முடித்ததாகவும், ஆனால் கணவரும் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனஉளைச்சல் அடைந்து தற்கொலை செய்துக்கொணடதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.- source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!