இளம் நடிகைக்கு நடந்த கொடுமை! இயக்குனர் செய்த மோசமான செயல்!


இளம் இயக்குனர் ஒருவர், நடிகை ஒருவரை பங்களாவில் அடைத்து வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்த சோழிங்கநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித். 25 வயதான இவர் உடுமேலைப்பேட்டையை சேர்ந்தவர்.

தற்போது இவர், வெப் தொடர்களை இயக்கி வருகிறார். இவர் இயக்கும் த்ரீ சம் என்ற புதிய வெப் தொடரின் படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலை உள்ள தனியார் ரிசார்ட்டில் நடந்து வந்தது.

இவரது இணையதள தொடரில் சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 22 வயதான இளம் நடிகை கதாநாயகியாக நடித்து வந்தார்.

ரஞ்சித்துக்கு உதவியாக கார்த்திக், ரியாஸ் உள்ளிட்ட பலர் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 15-ஆம் தேதி இளம் இயக்குநர் ரஞ்சி தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பதாக காவல்துறை கட்டுபபாட்டு அறைக்கு புகார் வந்தது.

இதையடுத்து உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று நடிகையை மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அதுமட்டுமின்றி, அந்த தொடரின் இயக்குனர் ரஞ்சித், மற்றும் புகாருக்குள்ளான உதவியாளர்கள் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் இளம் இயக்குனர் ரஞ்சித், அந்த நடிகை மீது கொண்ட காதலால் அவருடைய பெயரை கைகளில் பச்சை குத்தியதும் காதலிக்குமாறு அவரை டார்ச்சர் செயது வந்ததும் தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று படப்பிடிப்பின்போது வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் ரஞ்சித் நடிகையை தாக்கியுள்ளார்.

அத்துடன் தன்னை காதலிப்பதாகக் கூறி ரஞ்சித் தன்னை அடைத்து வைத்து கண்மூடித்தனமாக அடித்து உதைத்ததாக இளம் நடிகை போலீசாரிடம் கதறியுள்ளார். அத்துடன் ரஞ்சித் அடிக்கடி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் கண்ணீர்விட்டுள்ளார்.

இதையடுத்து இளம் இயக்குனர் ரஞ்சித் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பொலிசார் ரஞ்சித்தை கைது செய்து அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொரோனா பரிசோதனை நடத்திய பின்பு ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.- source: daily.tamilnadu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!