நடிகை சித்ராவின் மரணத்திற்கு யார் காரணம்? ரக்சனா? ஹேமந்தா? தொடரும் மர்மம்!


சின்னத்திரை நடிகையான சித்ரா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அதன் காரணத்தை கண்டறிய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் விசாரணையில் பல மர்மங்கள் வெளியாகியுள்ளது. இந்த தற்கொலைக்கு காரணமானவர்கள் யார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சித்ரா. 8 வருட போராட்டங்களுக்கு பிறகு அவருக்கு கிடைத்த பெரிய வாய்ப்பே இந்த சீரியல். லாக்டவுனுக்கு முன்னால் அவர் வாங்கிய ஆடம்பர பொருட்களுக்கு கடனை கட்டுவதற்காக அவர் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் பங்குபெற்றுள்ளார். இவரின் தற்கொலைக்கு இந்த மனஅழுத்தம் தான் காரணம் என பலரும் கூறி வந்தனர்.


இந்நிலையில் போலீசார் விசாரணையை, இவர் மனஅழுத்தத்திற்கு யார் காரணம் என்ற ரீதியில் தொடங்கினர். இரண்டாம் நாளில் சித்ரா நடிப்பது பிடிக்கவில்லை என்று வாக்குமூலம் அளித்திருந்தார் ஹேமந்த். அடுத்தடுத்த நாட்களில் தான் இவர் சித்ராவை சந்தேகப்பட்டு டார்ச்சர் செய்தது தெரிய வருகிறது. மேலும் சித்ரா அவரது மாமனார் உடன் போனில் பேசிய ஆடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இதில் சித்ரா ஹேமந்த் குடித்து விட்டு சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்துவதாக கூறியிருந்தார். ஆனால் அவரது அப்பா எதையும் கண்டு கொள்ளவில்லை. அதன் பிறகு தான் ரக்சனும், சித்ராவும் காதலித்து வந்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவரும் தனியாக இருந்த வீடியோவை வைத்து ரக்சன் மிரட்டியிருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த சமயத்தில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அந்த முதலிரவு காட்சி நடந்துள்ளது.


அந்த சீரியலில் இருந்து சித்ராவை விலகும்படியும் ஹேமந்த் வற்புறுத்தியுள்ளார். கடைசியாக இந்த தற்கொலையில் பலரும் காரணமாகியுள்ளனர். இதுவரையிலும் ரக்சன் பற்றிய எந்த தகவலும் வெளிவரவில்லை. அவர் வாயை திறந்தால் மட்டுமே என்ன உண்மை என்பது தெரியவரும். தற்போது ஹேமந்தை விசாரிக்க பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றுள்ளனர். சித்ரா தற்கொலைக்கான முழு உண்மைகள் எப்பொழுது தெரியவரும் என பலரும் காத்துக்கொண்டுள்ளனர்.- source: daily.tamilnadu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!