சித்ராவின் கணவர் ஹேம்நாத் 5 க்கும் மேற்பட்ட பெண்களுடன் காதல் கொண்டவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சித்ரா தற்கொலை வழக்கில் தினம் தினம் புதிய தகவல்கள் வெளியாகி வருகிறது.
அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேமந்த் சில தினங்களுக்கு முன்னர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
ஆரம்பத்தில் தொழில் அதிபர் என நம்பி ஹேமந்தின் காதல் வலையில் விழுந்துள்ளார் நடிகை சித்ரா.
சீரியலில் முல்லை – கதிராக ஜோடிகட்டிய சித்ராவும், குமரனும் நடன திறமையை காட்டுவதற்காக காட்டிய நெருக்கம் அவர்களுக்குள் இறுக்கமாகி விடுமோ என்று சந்தேகம் கொண்ட ஹேமந்த் சித்ராவை கேள்விகளால் துளைத்து எடுத்துள்ளான்.இதையடுத்தே இருவருக்கும் மனக்கசப்பு ஆரம்பமானது.
கைது செய்யப்பட்ட ஹேமந்திடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
நேற்றைய விசாரணையில் அவர் 5 க்கும் மேற்பட்ட பெண்களுடன் காதல் கொண்டவர் என்பதும் பல பப்புகளில் விடிய விடிய போதையில் பொழுது போக்கியதும் தெரியவந்துள்ளது.
இதனிடையில் சிறையில் உள்ள ஹேமந்தை நேற்று அவர் தந்தை ரவிச்சந்திரன் சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் திருமணமான 2 மாதத்திலேயே சித்ரா இறந்ததால் இவ்வழக்கில் கோட்டாட்சியரும் விசாரணை நடத்துகிறார்.
இதையடுத்து விசாரணைக்காக பொன்னேரி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹேமந்தை தற்போது பொலிசார் ஸ்ரீபெரும்புதூர் அழைத்து சென்றுள்ளனர்.- source: daily.tamilnadu
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!