2 நாள் சோகம்… பின் காட்டிக்கொடுத்த முகம் – சித்ரா மரண வழக்கில் ஹேமந்த் சிக்கியது எப்படி ?


சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் அவரது கணவரான ஹேமந்த் சிக்கியது எப்படி என்பது குறித்து போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வந்தவர் நடிகை சித்ரா. பல தொலைக்காட்சி சேனல்களில் விஜேவாகவும் பணியாற்றியிருக்கிறார். இப்படியிருக்கும் நிலையில் கடந்த புதன் கிழமை நசரத் பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சித்ரா.

இதில் கணவர் உடன் இருந்த போதே சித்ரா தற்கொலை செய்து கொண்டதும் அவரது முகத்தில் காயங்கள் காணப்பட்டிருந்ததும் பலவிதமான கேள்விகளை கிளப்பியிருந்தது . இதையடுத்து சித்ராவின் உடலை மீட்ட உடனேயே உடனிருந்த கணவர் ஹேமந்திடம் விசாரணையை ஆரம்பித்திருந்தனர் போலீசார். இதில் சித்ராவின் கணவரான ஹேமந்த் முதல் 2 நாள் விசாரணைக்கு சோகம் சொட்ட சொட்ட காவல் நிலையத்துக்கு வந்துள்ளார் . ஆனால் மூன்றாவது நாளே அவரது நடத்தையில் மாற்றம் காணப்பட்டது .

அவரது முகத்தில் சிரிப்புடன், மனைவி இல்லாத சோகம் கொஞ்சம் கூட இல்லாமல் மகிழ்ச்சியாக காணப்பட்டிருந்தார் ஹேமந்த்.இந்த இடத்தில்தான் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தான் அவரிடம் போலீசார் விசாரணையை கடுமையாக்கி இருக்கிறார்கள் .- source: dina.seithigal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!