ஹேமந்தை காதலித்த பெண் மருத்துவருக்கும் இது தான் நடந்திச்சாம்..!


நடிகை VJ சித்ரா மரணம் தற்கொலை என கூறப்பட்டுள்ள போதும் அதில் இன்னும் மர்மம் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. முக்கியமாக தூக்கிட்டு தற்கொலை செய்தவரின் கழுத்தில் எந்தவொரு காயம் மற்றும் அடையாளம் இல்லாமல் எப்படி இருக்கும் என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. போலீசார் தொடர்ந்து சித்ரா கணவர் ஹேமந்திடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது சித்ராவின் தாய்மாமாவான சுரேஷ், சேலையில தூக்குப் போட்டதுக்குக் கழுத்துல காயம் இருக்கணுமே, கன்னத்துல, தாடையில, நெஞ்சுல எல்லாம் அடிபட்டிருக்கு. எங்க பொண்ணு தைரியமானவள் சத்தியமாக சித்துவோட சாவில் மர்மம் இருக்கிறது. எங்களுக்கு நியாயம் வேண்டும் என கதறினார்.

ஹேமந்த்தின் நட்பு வளையத்தில் இருந்த சின்னத்திரை நடிகை ஒருவர் கூறுகையில், சித்ரா மட்டுமல்ல, இதற்கு முன்னால் ஹேமந்த்தைக் காதலித்த பெண் மருத்துவர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டார். சித்ராவோடு அறிமுகம் ஏற்படுவதற்கு முன்னர் என்னிடம் வாட்ஸ்அப்புல சாட் பண்ணிக்கிட்டிருந்தார், உன்னை எப்போது மீட் பண்ணலாம் என நச்சரிப்பார்.

பப்புல எல்லாரும் குடிக்கும் போது அவர் மட்டும் அளவா குடிப்பார். இதையே சாக்காக வைத்து , பெண்களிடம் நெருங்குவார். ஹேமந்தால் பிரபல இயக்குநர் ஒருவரின் முதல் மனைவியும், பிரபல தொகுப்பாளினி ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என பகீர் கிளப்பியுள்ளார்.- source: express

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!