விளையாட்டாக கதிரிடம் ஏன் அப்படிச் சொன்னார் சித்ரா… கதறும் ரசிகர்கள்..!


பாண்டியன் ஸ்டோர் சீரியலில் விளையாட்டாக பேசிய வார்த்தைகள் தான் தற்போது சித்ராவுக்கு வினையாக முடிந்துவிட்டது என்று ரசிகர்கள் கதறி அழுகின்றனர். யாராக இருந்தாலும் ஒருவர் அருகில் இருக்கும் போது அவர்கள் பேசிய வார்த்தைகள் அந்த அளவிற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால் அது அவர் இல்லை என்று தெரியும் போது அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் மனதிற்கு கஷ்டத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் அவர் பேசிய பழைய வீடியோக்களும் போட்டோக்களும் அவருடைய ரசிகர்கள் தங்களுடைய மன கவலையோடு இன்ஸ்டாகிராமில் பரப்பி வருகின்றனர் .அந்த மாதிரி தான் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கொஞ்ச நாளைக்கு முன்னாடி கதிரிடம் நான் செத்துப் போயிட்டா நீங்க வேற கல்யாணம் பண்ணி கொள்வீங்களா என்று திரும்பத் திரும்ப கேட்பார்.

அந்த வீடியோவை தற்போது அவருடைய ரசிகர்கள் இப்படி நடக்கும் என்பதற்காகவா அப்பவே அப்படி கேட்டீங்க என்று வருத்தத்தோடு வெளியிட்டு வருகிறார்கள். இந்த மாதிரி அவர் பேசிய பல வீடியோக்களையும் எடிட் பண்ணி அவருடைய ரசிகர்கள் தங்களுடைய கவலைகளை தெரிவித்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் அவருடைய ரசிகர்கள் இனி நாங்கள் பாண்டியன் ஸ்டோர் சீரியல் பார்க்க போவது இல்லை .அந்த சீரியலில் முல்லை கேரக்டரை இறந்துவிட்டார் என்று காட்டி விடுங்கள். அவருக்கு பதிலாக யாரையும் அதில் நடிக்க வைக்காதீர்கள் அப்படி இன்னொருவரை எங்களால் அந்த இடத்தில் பார்க்க முடியாது என்று தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.- source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!