டிக்டாக்கில் சூர்யாவுடன் டூயட் ஆடியதை நினைத்து அசிங்கப்படுகிறேன்’ – ஜிபி முத்து ஆவேசம்!


டிக்டாக் மூலம் பிரபலமானவர் சூர்யா. இவர் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதை பற்றி அறிந்து கொண்ட டிக்டாக்கில் சூர்யாவுடன் டூயட் ஆடும் ஜி.பி. முத்து சூர்யாவுடன் வீடியோ செய்ததை நினைத்து அசிங்கப்படுவதாக கூறி உள்ளார்.

டிக்டாக் ரவுடி பேபி சூர்யா

டிக்டாக்கில் ரவுடி பேபி சூர்யா மிகவும் பிரபலமானவர். இவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக திருச்சியில் கைது செய்யப்பட்டார். ஸ்பா என்ற பெயரில் வீட்டிற்க்கே வந்து மசாஜ் செய்யப்படும் தொழிலில் பாலியல் குற்றங்கள் அதிகமாக நடைபெறுவதாக குற்றசாட்டு எழுந்தது. மேலும், ஏழை பெண்களை வேலை தருவதாக கூறி ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

வசதிபடைத்த இளைஞர்கள், ஐடி பணியாளர்கள், பணக்கார வயதானவர்களை குறிவைத்தே பாலியல் தொழில் நடக்கிறது. இதையடுத்து திருச்சி முழுவதும் போலீசார் தீவிரமாக அனைத்து மசாஜ் சென்டர்களிலும் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது உறையூர் பகுதியை சோதனை செய்யும் போது ரவுடி பேபி சூர்யா மற்றும் 10 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர், தான் பாலியல் தொழிலில் ஈடுபடவில்லை என கூறி கதறி அழுகிறார். இது பற்றி அவருடன் டிக் டாக்கில் டூயட் ஆடி வீடியோ போடும் ஜி.பி. முத்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார். “என்னதான் குடும்ப வறுமை காரணமாக இருந்தாலும், இருப்பதை சாப்பிட்டு கவுரவமாக வாழவேண்டும், இப்படியா செல்வது.. அவருடன் எத்தனையோ பாடல்களுக்கு டூயட் ஆடியது நினைத்து நினைத்து அசிங்கப்படுவதாக” கூறியுள்ளார்.- source: daily.tamilnadu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!