பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இனி முல்லையாக நடிக்கப்போவது இவரா..?


தமிழகத்தில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை பரபரப்பாகியுள்ளது. தற்போது அவரது கணவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அடுத்து சகநடிகைகள், உறவினர்களிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் சித்ரா நடித்து வந்த முல்லை கதாப்பாத்திரத்தில் அடுத்து யார் என்ற விவாதம் எழுந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா. தமிழக இல்லதரசிகள் மனத்தில் இந்த தொடர் மூலம் இடம்பிடித்தார்.


இந்த சீரியலை பல ரசிகர்கள் சித்ராவிற்காவே பார்த்ததாக கூறப்படும் நிலையில், முல்லை கதாபாத்திரத்தில் அடுத்து யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் முல்லை கதாபாத்திரத்திற்கு பிரபல சின்னத்திரை நடிகையான சரண்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே நடிகை சரண்யா நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சித்ராவின் நெருங்கிய தோழியான சரண்யா, கடைசி நேரத்தில் சித்ராவுடன் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.- source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!