நண்பர்கள் 3 பேரை ஒரே நேரத்தில் வெட்டி கொன்ற கும்பல் !


வேலூர் மாவட்டத்தில் அரியூர் அடுத்த புலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் தணிகைவேல். இவர் சென்னை புழல் மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றி வந்தார்.

தணிகைவேல், இரவில் தனது நண்பர்கள் திவாகர், காமேஷ் ஆகியோருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென ஆயுதங்களை எடுத்தனர். அதனை பார்த்த தணிகைவேல் உள்பட மூன்றுபேரும் சுதாகரித்து தப்பியோட முயற்சி செய்வதற்குள் அக்கும்பல் அவர்களை தாக்கியது.

இதில் 3 பேரையும் அவர்கள் அரிவாளால் சுற்றிவளைத்து வெட்டி உள்ளனர். பலத்த வெட்டுகாயம் அடைந்த அவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தனர். இதனால் அப்பகுதி பரபரப்பானது.

இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக 7 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்விரோதம் காரணமாக கொலை சம்பவம் நிகழ்ந்தததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கொலையாளிகளை கைது செய்யவேண்டும் என புகார் கூறி வருகின்றனர்.
தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான நிலை நிவவுவதால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முன்விரோதம் காரணமாக தணிகைவேல், திவாகர், காமேஷ் ஆகியோர் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

அண்மையில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டதில் நண்பர்களான இவர்கள் மூவருக்கும் தொடர்பு உள்ளதாக புகார் உள்ளது. எனவே அந்த இளைஞரின் தரப்பினர் தான் இவர்களை கொலை செய்திருக்கலாம் என சந்தேகித்த போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.- source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!