நடிகை சித்ராவின் கடைசிவரை நிறைவேறாத ஆசை.. சோகத்தில் ரசிகர்கள்.!!


உயிரிழந்துள்ள சித்ரா ரசிகர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாட ஆசைப்பட்ட நிலையில் அது நிராசையாக மாறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மே 2ஆம் தேதி சித்ராவின் பிறந்தநாள். அதனால் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே அவர் பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாட திட்டமிடப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில் தான் மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு ஏற்படத் தொடங்கியது.

இதனால் தனது பிறந்தநாளை எளிமையாக வீட்டிலேயே கொண்டாடினார் சித்ரா. அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் ரசிகர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதனை நிவர் புயல் கெடுத்துவிட்டது.

இந்நிலையில் தான் சித்ரா உயிரிழந்துள்ளார். அதனால் அவரது ஆசை நிறைவேறாத ஆசையாகவே இருந்துவிட்டது. தனக்கு இந்த அளவுக்கு புகழ் கிடைக்க ரசிகர்கள் தான் காரணம் என்பதால் அவருக்கு எப்போதும் ரசிகர்கள் மீது தனிப்பிரியம்.- source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!