சிறையில் ஜெயலலிதாவை நினைத்து கண்ணீர் சிந்திய சசிகலா..!


ஜெயலலிதாவின் நினைவு நாளில் அவரது நெருங்கிய தோழியான சசிகலா, சிறையில் ஜெயலலிதாவை நினைத்து கண்ணீர் சிந்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

அவரது தண்டனை காலம் முடிந்து அடுத்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் 27-ந் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர் தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதத்தை செலுத்தியுள்ளார். அவர் எந்த நேரத்திலும் விடுதலை ஆகலாம் என்ற ஒரு தகவலும் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் 4-வது ஆண்டு நினைவு தினம் கடந்த 5-ந் தேதி அனுசரிக்கப்பட்டது. அன்றைய தினம் அவரது நெருங்கிய தோழியான சசிகலா, சிறையில் ஜெயலலிதாவை நினைத்து கண்ணீர் சிந்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்று முழுவதும் அவர் ஜெயலலிதாவின் நினைவுகளில் மூழ்கி இருந்துள்ளார்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!