இறுதியாக சீரியல் நடிகை சித்ரா பதிவிட்ட புகைப்படம் இது தான்..!


தற்கொலை செய்வதற்கு முன்னதாக தொகுப்பாளினி சித்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக வலம் வருபவர் சித்ரா. தொகுப்பாளினியாக பயணத்தை தொடங்கி பல சேனல்களில் பணியாற்றிய இவர் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிஸியாக நடித்து வந்தார்.

இந்த சீரியல் மூலமாக இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாக்கியிருந்தது. மேலும் இவருக்கு ஹேம்நாத் என்பவருடன் விரைவில் திருமணம் நடைபெற இருந்தது.

இப்படியான நிலையில் சென்னையில் உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று அதிகாலை இவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.


இவரது இந்த முடிவு சின்னத்திரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் தங்கியிருந்த பைவ் ஸ்டார் ஹோட்டலில் சித்ராவுடன் அவருடைய வருங்கால கணவர் ஹேம்நாத் அவர்களும் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இவர் இப்படியான முடிவை எடுப்பதற்கு முன்னதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில அழகிய போட்டோக்களை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இப்படியெல்லாம் புகைப்படம் வெளியிட்டு விட்டு எப்படி உங்களால் இப்படி ஒரு முடிவை எடுக்க முடிந்தது என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.- source: kalakkal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!