பஸ்சுக்கு காத்து நின்ற இளம்பெண்…. போதையில் தகராறு செய்த காவலர்..!


சென்னையில் பஸ்சுக்கு காத்து நின்ற இளம்பெண்ணிடம் போதையில் தகராறு செய்த காவலர் கைது செய்யப்பட்டார்.

வடபழனி 100 அடி சாலையில் அம்பிகா எம்பயர் ஹோட்டல் அருகே ஞாயிறு இரவன்று இளம்பெண் ஒருவர் பஸ்சுக்காக காத்து நின்றார். அந்தப் பகுதியில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் அவர், பணி முடித்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், தன்னுடன் வருமாறு அந்தப் பெண்ணை அழைத்துள்ளார். அப்பெண் மறுக்கவே அவர் இறங்கி வந்து அப்பெண்ணின் கையைப் பிடித்து தன்னுடன் வருமாறு இழுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த இளம்பெண்ணும், அருகில் நின்றிருந்த மற்றொரு பெண்ணும் கூச்சலிட்டுள்ளனர். அவர்கள் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் அந்த வழியாக சென்றவர்கள் உதவிக்கு வந்தனர்.

அப்போது கையைப் பிடித்து இழுத்தவர் மதுபோதையில் இருந்ததும், காவலர் சீருடையில் இருந்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அவரை நையப் புடைத்துள்ளனர். மொபைல் போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

விசாரணையில், அவர் சென்னை கே.கே.நகர் காவல் நிலையத்தை சேர்ந்த ராஜீவ் என்ற காவலர் என்பதும், பணி நிமித்தம் எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதும் தெரிய வந்தது. போதையில் இளம்பெண்ணிடம் தவறாக நடந்த அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!