25 வயது மனைவி… 42 வயது கணவர் – திருமணமான 6 ஆண்டில் நடந்த பகீர் சம்பவம்!


25 வயது பெண்ணும் அவரின் 42 வயது கணவனும் வீட்டின் தனித்தனி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

குஜராத்தின் சரா கிராமத்தை சேர்ந்தவர் பால்தேவ் (42). விவசாயம் செய்து வந்தார்.

இவருக்கும் ஹேமா (25) என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டிருக்கிறது. இருவருக்கும் 17 வயது வித்தியாசம் என்பதால் காதலுக்கு குடுமபத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் திருமணம் செய்து கொள்வதில் இருவரும் தீவிரம் காட்டியதால் அதற்கு குடும்பத்தார் சம்மதித்தனர்.

இதை தொடர்ந்து ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் பால்தேவ் மற்றும் ஹேமாவுக்கு திருமணம் நடந்தது.

இருவரின் வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதால் அவர்களின் திருமணம் ஊர் முழுவதும் விவாத பொருளாக மாறியது. பால்தேவ் – ஹேமா தம்பதிக்கு குழந்தையில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் பால்தேவ் மற்றும் ஹேமா நேற்று முன் தினம் தங்கள் வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் இருந்தனர்.

இருவரும் தனித்தனி அறையில் இறந்து கிடந்தனர்.

அக்கம்பக்கத்தில் வசிக்கும் சிலர் பால்தேவ் வீட்டுக்கு வந்த போதே இந்த காட்சியை கண்டு அதிர்ந்து போய் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இருவர் சடலங்களையும் கைப்பற்றினர்.

ஊர் மக்கள் கூறுகையில், தம்பதி இருவரும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தனர், அவர்களுக்குள் இந்தவொரு சண்டையும் வந்து நாங்கள் பார்த்ததில்லை.

பால்தேவ் ஒரு அறையிலும், ஹேமா ஒரு அறையிலும் தூக்கில் தொங்கியது சந்தேகம் கிளப்புகிறது என கூறியுள்ளனர்.

இதை தொடர்ந்து போலீசார் இது தற்கொலையா அல்லது கொலையா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.- source: daily.tamilnadu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!