மின்தடையை சரிசெய்ய சென்ற ஊழியர்கள் இருவருக்கு நடந்த பரிதாபம்..!


காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த 49 வயதான பாக்கியநாதன் மற்றும் 45 வயதான தயாளன் ஆகியோர் மின் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர். இதில் தயாளன் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்து உள்ளார்.

இந்நிலையில் ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் மழை காரணமாக மின்தடை ஏற்பட்டதை அடுத்து, அதை சரிசெய்வதற்கான பாக்கியநாதன் மற்றும் தயாளன் ஆகியோர் சென்று உள்ளனர்.

அப்போது அங்கு இருந்த மின் கம்பத்தில் இருந்த மின் வயர் அறுந்து இவர்கள் மீது விழுந்ததில் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.- source: tamil.yugam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!