அர்ச்சனாவையே வாய் அடைக்கச் செய்த ஆஜித்..!


பிக்பாஸ் போட்டிக்கு வரும் போட்டியாளர்கள் பலர் மாசாக வருவார்கள். ஆனால் பிரச்சனைகள், சண்டைகள் வர தொடங்கிய உடன் எப்படா வீட்டுக்கு போவோம் என்ற நினைப்புக்கு வந்துவிடுவார்கள். அதை வெளிப்படையாகவே பேசிவிடுவார்கள்.

அதை வைத்து அர்ச்சனாவை வாய் அடைக்கச் செய்துள்ளார் ஆஜித். நீங்கள் பிக்பாஸ் கேம்முக்குள் வரும் போது, உங்களை எல்லோரும் ஒரு கடினமான போட்டியாளர் என்று நினைத்தோம். கமல் சார் உடன் பேசும் போது கூட நான் இன்னும் நக்கல் எல்லாம் ஆரம்பிக்கவில்லை என்று கூறியிருந்தீர்கள்.

ஆரம்பத்தில் ஓர் இருநாட்கள் அப்படி தான் இருந்தீர்கள். ஆனால் அது அடுத்து வந்த வாரங்களில் தொடர்ந்து குறைந்துவிட்டது போல எனக்குத் தெரிகிறது. அடுத்து எப்போது பார்த்தாலும் நான் வீட்டுகு போக வேண்டும் என்று கூறிக்கொண்டு இருக்கிறீர்கள் இல்லையா. ஆனால் டாஸ்க் என்று வந்துவிட்டால் நல்லா செய்கிறீர்கள்.

எனக்கு இப்போது உள்ள ஒரு சந்தேகம், நீங்க இப்போது உன்மையிலேயே வீட்டிற்குச் செல்ல வேண்டுமா? இந்த ஷோவில் வெற்றி பெற வேண்டுமா? எந்த எண்ணத்தில் இப்போது உள்ளீர்கள் என்று கேட்டுள்ளார்.

இந்த கேள்வியைக் கேட்ட உடன் அர்ச்சனா வாய் அடைத்துப் போனது போல, அர்ச்சனா ரியாக்‌ஷன் ஒன்றை கொடுத்துள்ளார்.- source: seithichurul

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!