கத்தி குத்து காயங்களுடன் பள்ளி கழிவறையில் மாணவன் மீட்பு.. பின்ணனியில் அதிர்ச்சி..!


உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் அமைந்த பிரைட்லேண்ட் பள்ளி கூடத்தில் படித்து வந்த 1ம் வகுப்பு மாணவன் கழிவறையில் கத்தி குத்து காயங்களுடன் கிடந்துள்ளான்.

இதுபற்றி மாணவனின் தந்தை கூறும்பொழுது, எனது மகன் காயமடைந்த தகவலை பள்ளி நிர்வாகம் எங்களிடம் தெரிவித்தது. அவனை 6ம் வகுப்பு மாணவி கத்தியால் தாக்கியுள்ளாள் என கூறியுள்ளார்.

இந்த தாக்குதலை நடத்தியவர் பற்றியும் மற்றும் அது மாணவி என்பது பற்றியும் கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பள்ளி அதிகாரிகள், மாணவனின் உயிரிழப்புடன் நீல திமிங்கல விளையாட்டுக்கு தொடர்பு இருக்கும் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் ரியான் சர்வதேச பள்ளி கூடத்தின் 2ம் வகுப்பு மாணவன் பிரத்யூமன் பள்ளியின் கழிவறை அருகே காயங்களுடன் இறந்து கிடந்துள்ளான். இதனை அடுத்து அந்த பள்ளியின் 16 வயது மாணவன் கைது செய்யப்பட்டான்.

அவன் போலீசாரிடம், தேர்வு ஒன்றை நிறுத்தி வைப்பதற்காகவும், பெற்றோர் மற்றும் ஆசிரியர் கூட்டத்தினை நடக்காமல் தடுப்பதற்காகவும் கொலை செயலில் ஈடுபட்ட விவரத்தினை கூறியுள்ளான்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!