வைரலாகும் பிக்பாஸ் சுசியின் முதல் இன்ஸ்டா பதிவு


பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று குறைந்த வாக்குகள் அடிப்படையில் சுசித்ரா வெளியேற்றப்பட்ட நிலையில் அவர் பிக்பாஸில் இருந்து வெளியேறி பின்னர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்பாடா ஜெயிலில் இருந்து தப்பித்து விட்டேன் என்று கூறியுள்ளார். பிக்பாஸ் வீட்டை ஒரு ஜெயில் என்று கூறிய அவரது இந்த இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது.

முன்னதாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் விநாயகர் புகைப்படத்தை பதிவு செய்து அவர்தான் என் பாதுகாவலர் என்று குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமின்றி டிக் டாக் பழைய வீடியோ ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் சுசித்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் பாலாஜி மற்றும் மற்றும் ஷிவானி காதல் குறித்த ஒரு மீம்ஸ் பதிவு செய்து அதற்கு சூப்பர் என்றும் கமெண்ட் அடித்துள்ளார்.- source: webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!