மாமனாரின் டார்ச்சர்… காதிலேயே போட்டுத்தள்ளிய மருமகள். வெளியான பரபரப்பு தகவல்..!!


சென்னை, சவுகார்பேட்டையில் சொத்துக்காக மாமனார் மாமியார் கணவனை சுட்டுக் கொன்ற ஜெயமாலா ஜீவனாம்சம் கேரி கோர்ட்டில் கேஸ் நடந்து வந்த நிலையில் மொத்த சொத்தையும் தனது குழந்தைகள் பெயரில் எழுதி தர வேண்டும் என்று கேட்டு தகராறு செய்துள்ளார். இதற்கு கணவர் குடும்பத்தினர் ஒரு பைசா கூட தரமுடியாது என்று கூறியதால் ஆத்திரத்தில் மூன்று பேரையும் சுட்டு தள்ளியுள்ளார். மாமனாரை மட்டும் காதில் சுட்டு, மற்றவர்களின் நெற்றிப் பொட்டில் சுட்டுக் கொன்றுள்ளார். இது சம்பந்தமாக விசாரணை இறங்கிய போலீசார் ஜெயமாலா அண்ணன் உள்ளிட்ட 3 குற்றவாளிகளை ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அப்போது ஜெயமாலா அண்ணன் கூறிய வாக்குமூலத்தில் மருமகள் என்றும் பாராமல் மாமனார் பாலியல் தொல்லை தந்துள்ளதாகவும், மாமனாருடன் சேர்ந்து வீட்டிலுள்ள மற்ற சொந்தக்காரர்களும் பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்கள். இது பற்றி தெரிந்த கணவனும் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார். அதற்கு காரணம் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இதை மறைத்து ஜெயமாலாவை அவருக்கு கல்யாணம் செய்து வைத்துள்ளனர். இதைக் கூறி ஜெயமாலா பலமுறை அழுதுள்ளார். பிறகு குடும்பத்துடன் கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.

சொத்து பிரச்சனைகாகவே கொலை நடந்தது என்று நினைத்திருந்த நிலையில், தற்போது மற்றொரு காரணம் தெரிய வந்துள்ளது. ஜெயமாலா போலீசில் மாட்டாமல் வேறு மாநிலத்திற்கு தப்பிச் சென்றிருக்க கூடும் என்று சந்தேகத்தில் வேட்டையை ஆரம்பித்தனர். ஜெயமாலா வின் புகைப்படங்களை அனைத்து காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ஜெயமாலா மூன்று பேர் உள்ளிட்ட கும்பல் ஆக்ராவில் நடந்து கொண்டிருந்தபோது போலிசை பார்த்து தப்பிக்கும் முயற்சி செய்துள்ளார்.

அதன் பிறகு சுதாரித்துக் கொண்ட போலீஸ் கேமராவை விரட்டி பிடித்தனர். இதற்கு முன்னரும் கணவர் குடும்பத்தை தீர்த்துக்கட்ட இரண்டு முறை முயற்சி செய்ததாகவும் கடந்த செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் அவர்களை கொள்ள ஜெயமாலா முயன்றதாகவும், ஆனால் சந்தர்ப்பம் சரியாக அமையாததால் நவம்பர் 11 அன்று கொலை செய்தார் என்பதும் தெரியவந்தது. சத்தம் கேட்காமல் இருக்க சைலன்சர் துப்பாக்கியை உபயோகித்தது விசாரணையில் தெரியவந்தது.- source: seithisolai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!