செல்போனில் சகோதரிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்…. சகோதரர்கள் செய்த பயங்கரம்..!


ராஜபாளையம் அருகே செல்போனில் சகோதரிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த கூலி தொழிலாளியை அண்ணன்-தம்பி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது27), கூலி தொழிலாளி.

இவர் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் (37) என்பவரது சகோதரிக்கு செல்போனில் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி அறிந்த செந்தில், ரவிக்குமாரை கண்டித்தார். ஆனாலும் அவர் தொடர்ந்து ஆபாச மெசேஜ் அனுப்பி வந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த செந்தில் ரவிக்குமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். நேற்று இரவு ரவிக்குமார் சொக்க நாதன்புத்தூர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது செந்தில் மற்றும் அவரது தம்பி செல்வம் (30) ஆகியோர் ரவிக்குமாரை வழிமறித்து உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினார்கள். இதில் சம்பவ இடத்திலேயே ரவிக்குமார் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் பற்றி அறிந்த சேத்தூர் இன்ஸ்பெக்டர் பவுல் யேசுதாஸ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று ரவிக்குமார் பிணத்தை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக செந்தில் மற்றும் அவரது தம்பி செல்வம் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!