தலைக்கேறிய காம வெறி… பெற்ற தாயிற்கு மகன் செய்த கொடூரம்..!


பெற்ற தாயை மகன் கற்பழித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் காவேரி மாவட்டம் சிக்காவி அருகே உள்ள வனஹள்ளி கிராமத்தை சேர்ந்த பெண் பாரவ்வா(வயது 39). இவரது மகன் சிவப்பா(21). கடந்த நான்கு நாட்களுக்கு முன் தாய் மற்றும் மகன் இருவரும் வெளியூர் சென்றிருந்தநிலையில் இருவரும் வீடு திருமபவிலை. மேலும் இருவரை பற்றியும் எந்த தகவலும் இல்லை. உறவினர்கள் இவர்களை தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் கங்கிபாவி கிராமம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் பாரவ்வா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த கொலை சம்மந்தமாக வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த பாரவ்வாவின் மகன் சிவப்பாவை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் குடிபோதையில் தனது தாயை அடித்து கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளார். பின்னர் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார் சிவப்பா.

அவர் கூறிய வாக்குமூலத்தில், கடந்த 12-ந் தேதி சிவப்பா, தனது தாய் பாரவ்வாவை அழைத்துக் கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது பாரவ்வாவை தனது தாய் என்றும் பாராமல் தனது ஆசைக்கு இணங்குமாறு கூறியுள்ளார். இதனை கேட்டு பாரவ்வா அதிர்ச்சி அடைய, அவர் தனது மகனை திட்டி, அவருக்கு அறிவுரை கூறியுள்ளார்.

ஆனால் காம வெறியில் இருந்த சிவப்பா தனது தாயை அடித்து உதைத்து அருகில் இருந்து காட்டு பகுதிக்கு கடத்திச்சென்று கற்பழித்துள்ளான். மேலும், தனது தாய் இதுகுறித்து வெளியே கூறிவிடுவார் என்ற பயத்தில் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து ஒன்றும் தெரியாததுபோல் நகர்ந்துள்ளார் சிவப்பா.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சிவப்பாவிடம் மேலும் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.- source: spark

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!