திண்டுக்கல் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற பெண் தலைவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் அடுத்துள்ள சென்னமநாயக்கன்பட்டி மகாராஜா நகரை சேர்ந்தவர் பிரவீன்குமார்.. இவரது மனைவி இந்திரா.. இவருக்கு 37 வயதாகிறது.. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
சத்திரப்பட்டியை பூர்வீகமாக கொண்டவர் பிரவீன்குமார்.. ஆனால் குழந்தைகள் படிப்புக்காக திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பழனி அடுத்துள்ள சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவியாக வெற்றி பெற்றவர் இந்திரா..
அதனால் தன் பணி நிமித்தமாக சத்திரப்பட்டிக்கு அடிக்கடி சென்று வந்தார்.. இதுதான் கணவன் மனைவி இடையே தகராறாக வெடித்துள்ளது.. குடும்பத்தை கவனிக்க திண்டுக்கல்லுக்கும், ஊராட்சி நிர்வாகத்தை கவனிக்க சத்திரப்பட்டிக்கும் சென்று வருவது கணவருக்கு பிடிக்கவில்லை என்பதால் தகராறு தினந்தோறும் வெடித்து வந்துள்ளது.
அதனால் கணவருடன் பேசாமலேயே இருந்து வந்துள்ளார் இந்திரா.. இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவி இந்திரா மனம் உளைச்சலால் தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த தாடிகொம்பு போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.-source: oneindia
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!