கள்ள உறவுக்கு தடைபோட்ட கணவன்… ஆண் நண்பருடன் சேர்ந்து மனைவி செய்த கொடூரம்..!


“திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த கனவனை, ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார்.

தேனி மாவட்டம் கடமலைகுண்டு அருகே உள்ள மேலப்பட்டி பள்ளி தெருவைச் சேர்ந்தவர் முத்துக்காளை (42). இவருக்கும் தேனி அருகே உள்ள தர்மாபுரியை சேர்ந்த கலையரசி என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஹரிஷ்குமார் (13) மற்றும் கிஷோர் குமார் (12) என்ற இரு மகன்கள் உள்ளனர். கணவர் மனைவி இருவரும் கட்டட வேலை பார்த்து வருகின்றனர்.
கலையரசிக்கும் மேலப்பட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சேதுபதிக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் திருமணத்தை மீறிய உறவாக மாறியிருக்கிறது.

இவர்கள் உறவு குறித்து கணவர் முத்துகாளைக்கு தெரியவர கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குடும்பத்துடன் தர்மாபுரியில் உள்ள மனைவி வீட்டிற்கு வந்துள்ளனர்.

கடந்த 3 ஆம் தேதி முத்துகாளை தனது சகோதரர் ஈஸ்வரனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் மட்டும் ஊருக்கு வருவதாக கூறியுள்ளார். ஆனால் இரு தினங்களாக ஊருக்கு வரவில்லை. பின்னர் சகோதரனை காணவில்லை என கடந்த 5 ஆம் தேதி ஈஸ்வரன், கலையரசியை அழைத்துக்கொண்டு வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே சனிக்கிழமை இரவு மேலப்பட்டி செல்லும் வழியில் காமாட்சிபுரம் தனியார் கிணற்றில் அழுகிய நிலையில் முத்துகாளை சடலம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ஈஸ்வரன் தனது அண்ணி கலையரசி மீது சந்தேகம் அடைந்து அது குறித்து வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே கலையரசியிடம் வீரபாண்டி காவல்துறையினர் விசாரணை செய்ததில் தனது திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருக்கும் கனவனை கொலை செய்துவிடலாம் என முடிவு செய்ததாக கூறியுள்ளார். அத்துடன் முத்துகாளையை தனியாக யாரும் இல்லாத மலை பகுதிக்கு அழைத்து சென்று தனது ஆண் நண்பர் சேதுபதி மற்றும் அவரது நண்பன் கணேசன் உதவியுடன் கனவனை இரும்புக் கம்பியால் தலையில் அடித்து கொலை செய்துவிட்டு சடலத்தை ஒடைபட்டி கிராமத்தில் உள்ளகிணற்றில் வீசியதாக ஒப்புக்கொண்டார்.

கிணற்றில் இருந்த முத்துகாளை சடலத்தை தீயணைப்பு துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இக்கொலைச் சம்பவத்தில் கலையரசி மற்றும் அவரது ஆண் காதலர் சேதுபதியையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கணேசனை தேடி வருகின்றனர். திருமணத்தை மீறிய உறவு காரணமாக கணவனையே ஆண் காதலன் துணையோடு மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது”- source: puthiyathalaimurai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!