கல்யாணமாகி 12 வருஷமாகிறது…. மனைவிக்கு கணவன் செய்த பகீர் காரியம்..!


மனைவி அழகாக இருந்ததால், சந்தேகமும் அதிகமாகி குடும்பத்தை சிதைத்துவிட்டது.. இறுதியில் ஒரு கொலை வரை இந்த விவகாரம் முடிந்துவிட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ளது பள்ளசூளகரை என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் தங்கராஜ்.. இவரது மனைவி ருக்குமணி.

கல்யாணமாகி 12 வருஷமாகிறது.. ஆனால், குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது.. மனைவி அழகாக இருப்பதால், கல்யாணம் ஆனதில் இருந்தே தங்கராஜுக்கு சந்தேகம் பீடித்துள்ளது.. இதனாலேயே 2 பேருக்கும் அடிக்கடி சண்டையும் தகராறுமாக வெடித்துள்ளது.

தங்கராஜ் டெய்லர் வேலை பார்க்கிறார்.. குடிப்பழக்கமும் இருந்துள்ளது.. வீட்டு செலவுக்கு பணமும் தராமல் இருந்துள்ளார்.. இதையடுத்து, ஒரு தனியார் ஷூ கம்பெனியில் ருக்குமணி வேலைக்கு போக ஆரம்பித்தார்.. அப்போது அவர்களுக்குள் இருந்த சண்டை மேலும் அதிகமானது.

ராத்திரி நேரம் ஆகிவிட்டால் இவர்களது சண்டை அக்கம்பக்கத்தினருக்கு தெரிந்த ஒரு விவகாரம்தான்.. அப்படித்தான் சம்பவத்தன்றும் சண்டை வந்தது.. ஒருகட்டத்தில் ருக்மணி தூங்க போய்விட்டார்.. ஆனால் ஆத்திரம் அடங்காத சந்தேகபுத்தி கணவன், விடிகாலை ஐந்தரை மணி வரை அங்கேயே உட்கார்ந்து கொண்டார்.. பிறகு 30 கிலோ எடை கொண்ட கல்லை தூக்கி கொண்டு வந்து, தூங்கிக்கொண்டிருந்த ருக்மணி தலையில் போட்டார்.

இதில் தலை சிதறி ருக்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளிக்கவும் விரைந்து சென்று தங்கராஜை கைது செய்தனர்.. ருக்மணியின் சடலம் போஸ்ட் மார்ட்டம் செய்ய தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு தவறும் செய்யாத ருக்மணி, கொடூரமாக கொலை செய்யப்பட்டு, சடலமாக விழுந்து கிடந்ததை கண்டு உறவினர்கள் கதறி அழுதது காண்போரை நிலைகுலைய வைத்தது.source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!