காதலுக்கு வேட்டு வைத்த அர்ச்சனா! கடும் அப்செட்டில் பாலாஜி-ஷிவானி..!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போட்டியாளர்களில் பாலாஜி-ஷிவானி இடையே ரொமான்ஸ் நடந்து கொண்டிருப்பது கடந்த சில நாட்களாக பார்வையாளர்கள் பார்த்து கொண்டிருப்பது தெரிந்தது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற எப்.எம். டாஸ்க்கில் பாலாஜியை சுற்றி ஒரே ஒரு பெண் சென்று கொண்டிருப்பதாக கூறியதை அடுத்து அர்ச்சனாவிடம் இதுகுறித்து பாலாஜி பேசினார்.

அப்போது பாலாஜியிடம் ’வெளியே உனக்கு ஒரு இமேஜ் புரொஜக்ட் ஆகிக்கொண்டு இருக்கிறது என்றும், ஆனால் அது பிரச்சினையில்லை என்றும், ஆனால் அந்த பொண்ணு ஷிவானி இமேஜ் புராஜெக்ட் ஆவது நல்லது இல்லை என்றும் எனவே காதல் இருந்தால் அதனை கைவிடுமாறும் கூறினார்

இதனை அடுத்து ஷிவானியிடம் எனக்கு எந்தவிதமான ஈர்ப்பும் இல்லை என்றும், அவரை நான் லவ் பண்ணவும் இல்லை என்றும் அர்ச்சனாவிடம் பாலாஜி கூற, அப்படியே நடந்து கொள் என்று அர்ச்சனா கூறியுள்ளார். இதனை அடுத்து பாலாஜி-ஷிவானி இடையே கொஞ்சம் இருந்த காதலை அர்ச்சனா போட்டு உடைத்து விட்டதாக தெரிகிறது

ஆனால் அடுத்த காட்சியிலேயே ஷிவானியிஅம் பாலாஜி பேசியபோது ’அர்ச்சனா எனக்கு அம்மா எல்லாம் இல்லை, அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும் என்று அவசியமில்லை என்று கூறியதை பார்க்கும்போது குழப்பத்தின் உச்சம் தான் ஏற்படுகிறது.- source: webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!