மசாஜ் கேக்குதா உனக்கு…? ரொமான்ஸ் ஒரு கேடு… சக்காளத்தி சண்டை ஸ்டார்ட்!


பிக்பாஸ் வீட்டில் நாம் அனைவரும் எதிர்பார்த்தது போலவே பாலா மற்றும் ஷிவானிக்கு இடையிலான காதல் ஆழமாக போகிறது. ப்ரோமோ கொஞ்சம் தாமதமாக வந்தாலும் தரமா இருக்கிறது… இதை வைத்து இன்னைக்கு மீம்ஸ் கிரியேட்டர்ஸ் ஒரு வழி பண்ணிடுவாங்க.

ஒவ்வொரு சீஷனுக்கும் இந்த சம்பவம் மட்டும் தவறாமல் நடந்தேறுகிறது. ஆனால், இந்த காதல் ஒரு காலம் நிலைக்காது.
இது குளிர்காலத்தில் போர்த்துக்கொள்ளும் போர்வை போன்று. கோடை காலம் வந்தால் போர்வை தேவைப்படாது. அப்படித்தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே போனால் இந்த காதலும் தேவைப்படாது.

நாம் இதற்கு முன்னர் கூறியதை போலவே ஷிவானியை பாலாவுக்கு செட் பண்ணி கொடுத்துட்டு கேபிரில்லாவை வைத்து சக்காளத்தி சண்டை போட வைத்துட்டார் பிக்பாஸ். இன்று ஷிவானி பாலாவுக்கு தாய் மசாஜ் பண்றதென்ன…

ஊட்டி விடுறதென்ன இதெல்லாம் பார்த்து கேபி கண்ணீர் வடித்து சண்டையை ஸ்டார்ட் பண்ணிட்டாங்க. இனிமேல் அம்மோ சிவ சம்மோ தான்… எது எப்படியோ பாலா காட்டுல நல்ல அடை மழை தான் பெய்யுது.- source: webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!