யூடியூபர் வாசன் மீது பாபா கா தாபா உரிமையாளர் புகார்…!


டெல்லியைச் சேர்ந்த யூடியூபர் வாசன் மீது பாபா கா தாபா உணவக உரிமையாளர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

டெல்லி மால்வியா நகரில் பாபா கா தாபா என்ற பெயரில் உணவகம் நடத்தி வரும் காந்தா பிரசாத் தொடர்பான வீடியோ கடந்த மாதம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த வீடியோவை யூடியூப் நடத்தி வரும் கவுரவ் வாசன் என்பவர் எடுத்து தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார். கொரோனா ஊரடங்கால் தனது தொழில் முடங்கியதாகவும், வாடிக்கையாளர்கள் குறைந்ததால் உணவகத்தை நடத்த சிரமப்படுவதாகவும் காந்தா பிரசாத் கூறியிருந்தார்.

காந்தா பிரசாத் மற்றும் அவரது மனைவிக்கு பொதுமக்கள் உதவி செய்யும்படி யூடியூபர் வாசன் கேட்டுக்கொண்டார். இதற்காக தனது வங்கிக் கணக்கு விவரங்களை வாசன் கொடுத்துள்ளார். அந்த வங்கிக் கணக்கிற்கு பலர் பணம் அனுப்பி உள்ளனர்.

இந்நிலையில், தனது பெயரை பயன்படுத்தி திரட்டப்பட்ட நிதியை யூடியூப் உரிமையாளர் கவுரவ் வாசன் முறைகேடாக பயன்படுத்தியதாக மால்வியா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் காந்தா பிரசாத். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை வாசன் மறுத்துள்ளார். பாபாவை (பிரசாத்) பொதுமக்கள் தொந்தரவு செய்வதை நான் விரும்பவில்லை, எனவே எனது வங்கி விவரங்களை பகிர்ந்து நிதி திரட்டினேன் என்று வாசன் கூறி உள்ளார்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!