அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றியாளர்..? கணித்த ரஷ்ய விலங்கியல் பூங்கா கரடி..!


அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றியாளர் என ரஷ்ய விலங்கியல் பூங்காவில் உள்ள கரடி கணித்துள்ளது.

அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3ந்தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

அதிபர் தேர்தலில் ரஷ்ய நாட்டின் தலையீடு உள்ளது என்ற நீண்டகால சர்ச்சை எழுந்திருந்த நிலையில் அது புறந்தள்ளப்பட்டது. இந்நிலையில், ரஷ்யாவின் விலங்கியல் பூங்காவில் உள்ள சைபீரிய கரடி ஒன்று அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளரை கணித்துள்ளது.

இதுபற்றிய வீடியோ ஒன்றில், கூண்டில் இருந்து திறந்து விடப்பட்ட கரடியானது, ஒய்யார நடைநடந்து வெளியே வருகிறது. அதற்கு முன் தயாராக இரண்டு தர்பூசணி பழங்கள் வைக்கப்பட்டு இருந்தன. அவற்றில் ஒரு பழத்தில் தற்போதைய அதிபர் டிரம்பின் உருவமும், மற்றொன்றில் ஜோபைடன் உருவமும் வரையப்பட்டிருந்தது.

இதில், கரடி நேராக வந்து தன் முன்னேயிருந்த ஜோபைடன் உருவம் கொண்ட தர்பூசணியை தூக்கி சென்று மறைவாக அமர்ந்து சுவைத்தது. இதனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெறுவார் என நம்பப்படுகிறது.- source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!