மாறி மாறி.. அப்படியே லைவ் செய்து.. 2 மனைவிகளை வைத்து காசு பார்த்த கொடூர கணவன்..!


2 மனைவிகளுடன் உடலுறவு வைத்து கொள்வதை, அப்படியே லைவ்-ஆக ஒளிபரப்பு செய்து, அதை வைத்து காசு சம்பாதித்து வந்துள்ளார் கணவர்!

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா பகுதியை சேர்ந்தவர் நீரஜ்.. 24 வயதாகிறது.. இவருக்கு 2 மனைவிகள்.. முதல் மனைவி இப்போதான் 7 மாசம் கர்ப்பமாக இருக்கிறார்.. இந்நிலையில், 2வது மனைவி திடீரென நீரஜி மீது போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் தந்தார். அந்த புகாரை பார்த்துவிட்டு போலீசாரே அதிர்ந்துவிட்டனர்.

நீரஜ்-க்கு பணம் சம்பாதிக்கும் ஆசை நிறைய இருந்துள்ளது.. அதனால், டிஜிட்டல் மீடியா பற்றி அக்கு வேறு ஆணி வேறாக கற்று கொண்டார்.. ஆனால் 10-ம் கிளாஸ்கூட இவர் படிக்கவில்லை என்பது வேறு விஷயம்.

வேலைக்கே போகாமல் ஈஸியா பணம் சம்பாதிப்பது எப்படி என்பதுதான் இவரது ஐடியா… அதற்காகத்தான் ஆன்லைன் பக்கம் ஒதுங்கினார்.. அதற்கு தன்னுடைய 2 மனைவிகளையே முதலீடாக பயன்படுத்தினார். துணை இல்லாமல் தவிக்கும் நபர்களுக்கு, ஊர் சுற்ற கம்பெனி இல்லாமல் தவிக்கும் நபர்களுக்கு மனைவிகளை அறிமுகப்படுத்தி வைப்பாராம்.

டேட்டிங் ஆப்-கள் மூலம் அந்த கஸ்டமர்களிடம் ஆபாசமாக பேச வைப்பராம்.. அப்படி யாராவது கஸ்டமர்கள் பேசினால், அந்த ஆப்பிற்கு மெசேஜ் செய்ய சொல்வாராம்.. இன்பாக்ஸில், தான் தனது மனைவிகளுடன் உடலுறவு வைத்துக்கொள்வதை நேரலையில் பார்க்கலாம் என்று மெசேஜ் அனுப்புவாராம்..

அந்த மனைவிகளின் முகத்தை காட்டுவதற்கு ஒரு தொகை.. மாஸ்க் அணிந்து உடலுறவு கொள்ளும் வீடியோவுக்கு ஒரு தொகை, என பார்ட் பார்ட்டாக பிரித்து பணம் வசூலிப்பாராம். 100 ரூபாயில் இருந்து 1000 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கூகுள் பிளே மூலம் பணத்தை விருப்பப்படும் கஸ்டமர்கடளம் இருந்து பெற்றுக்கொள்வார்… அப்படி பணம் செலுத்தியவர்களுக்கு தன்னுடைய மனைவிகளுடன் இருக்கும் வீடியோவை லைவ் ஆக வழங்குவாராம் நீரஜ்.. இதற்கு நேரமும், கால அளவும் உண்டு.

இதுதான் நீராஜின் 2-ம் மனைவிக்கு பிடிக்காமல் போய்விட்டது.. இவ்வளவு நாள் கணவன் கட்டாயப்படுத்தவும் இந்த காரியத்தில் இறங்கி வந்தார்.. நேரலையில் உடலுறவில் ஈடுபட்டும் வந்துள்ளார். ஒருகட்டத்தில் டார்ச்சர் தாங்க முடியாமல்தான் புகார் வரை வந்துவிட்டார். இந்த புகாரின் பேரில் பலாத்காரம், தனியுரிமை மீறல், உள்ளிட்ட வழக்குகளை போலீசார் நீரஜ் மீது பதிவு செய்துள்ளனர்.. அத்துடன் கைது செய்து விசாரணையும் நடத்தினர்.

இதுகுறித்து போலீசார் சொல்லும்போது, “நீரஜ் தன் மனைவியையே இப்படிதான் சோஷியல் மீடியா மூலம் பழகி கல்யாணம் செய்து கொண்டார். 2-வது மனைவி கொஞ்சம் ஆன்மீக ஈடுபாடு உடையவர்.. உபியை சேர்ந்தவர்.. கடந்த அக்டாபர் மாசத்தில் இருந்துதான் இந்த காரியத்தில் இறங்கியுள்ளார் நீரஜ்… இப்படியே 6 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்தும் விட்டார்.. ஒரு நாளைக்கு மட்டும் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்து வந்துள்ளார்” என்றனர்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!